Saturday, October 16, 2010

சீமான் விடுதலை? 24 ந் தேதி திக் திக் திக்...

Nayanthara
சிறை மீளப் போகிறது சிங்கம் என்று குது£கலிக்கிறார்கள் சீமான் ஆதரவாளர்கள். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சீமான், புலியாக மட்டுமல்ல. புலிக்காகவும் உறுமக்கூடியவர் என்பதால் அவர் மீது சட்டம் 'கரண்ட்' போல் பாய்ந்திருக்கிறது. இப்போது அவர் சிறையிலிருந்து வெளியே வருவது நடக்காத காரியம் என்று ஒரு தரப்பும், இல்லையில்லை. விரைவில் தடைகளை உடைத்துவிட்டு வெளியே வருவார் என்று இன்னொரு தரப்பும் வாதாடிக் கொண்டிருக்க, இம்மாதம் 24 ந் தேதி நீதிமன்றத்திற்கு வருகிறார் சீமான்.
அன்றே அவர் விடுதலை செய்யப்படலாம் என்ற நம்பிக்கையும் அவரது தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. அப்படி விடுதலை செய்யப்பட்டால் அவர் முன்னிலும் வேகமாக முழங்குவாரா? விஜய்யின் 'பகலவன்' வேலைகளில் இறங்குவாரா?
இப்படி ஒரு கேள்வியோடு காத்திருக்கும் சீமான் ரசிகர்களுக்கு அவர் எது செய்தாலும் இனிப்பான விஷயம்தான்!

0 comments:

Post a Comment