Monday, November 7, 2011

விஜய் தயங்கினார், கௌதம் மேனன் சொன்னார் : 'யோஹன் அத்தியாயம் ஒன்று' பற்றி

அப்போது நண்பன் எப்படிப்பட்ட படம் என்ற கேள்விக்கு “ நண்பன் முழுப்படமும் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். ஷங்கர் சார் ஒரு பிரம்மாண்டமான இயக்குனர். இதை பக்கத்தில் இருந்து உணர்ந்தேன்” சொன்னார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உண்மையா என்ற கேள்விக்கும் “ ஆமாம்! அந்தப் படத்தின் தயாரிப்பாளர் விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.” என்றார். ஆனால் கௌதம் மேனன் உடனான படம் பற்றி கேட்டபோது “ அதுபற்றி இப்போது எதுவும் பேச வேண்டாமே அது அடுத்த வருட புராஜெக்ட்!” என்று தயங்கினார் விஜய்! 
இதை கௌதம் காதில் செய்தியாளர்கள் போட யோஹன் பற்றி விரிவாகவே பேசினார் கௌதம் “ யோஹன் - முதல் அத்தியாயம்... படத்துக்கு ஏன் அந்த பெயர் ? ஸோ சிம்பிள்! எனக்கு விஜய்யோடு முதல் சந்திப்பு சரியா அமையலை. அடுத்த இரண்டு சந்திப்புகளில் நான் சொன்னது அவரோட எண்ணத்துக்கு எட்டலை. கடைசிச் சந்திப்பில் 'இந்தத் தடவை நான் உங்களை விடப்போறது இல்லை.

 இனி, மிஸ் பண்ணவே வேண்டாம்ன்னு அவரே சொன்னார். நானும் அவரை வெச்சுப் படம் பண்ண ரொம்ப ஆர்வமா இருந்தேன். 'யோஹன்’ ஒரு இன்டர்நேஷனல் தமிழ்ப் படமாக இருக்கும். இதில் இன்டர்நேஷனல் ஏஜென்ட் ஆக வர்றார் விஜய். எனக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு படம் புதுசு. வெளிநாட்டு அசைன்மென்ட்டுக்குப் போன பிறகு, யோஹனின் இரண்டு மாத அனுபவங்கள்தான் முதல் அத்தியாயம்.

0 comments:

Post a Comment