Tuesday, December 13, 2011

யோஹனும் விஜயும்


யோகன் படத்தை போட்டன் கதாஸ் நிறுவனமும் ஈரோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக கூறினோம் . இப்பொழுது விஜய் இப்படத்தை பற்றி கூறிய செய்தியை சொல்கிறோம் .
இப்படம் மிகவும் வித்தியாசமான படம் . நானும் கெளதமும் இணைந்து ஒரு படம் செய்ய எண்ணினோம் இறுதியாக இப்படத்தை தெரிவு செய்தோம். இப்படம் காதல் சண்டை மற்றும் திரில்லர் நிறைந்துள்ள படம் இப்படம் கண்டிப்பாக எனது ரசிகர்களுக்கு பிடிக்கும். கெளதம் மற்றும் ஈரோஸ் உடன் இணைந்து பணியாற்ற இருப்பது சந்தோசமாக உள்ளது என விஜய் கூறினார்.
இப்படம் முளிவதும் லண்டனில் படமாக்க உள்ளனர். இப்படம் சர்வதேச படமாக அமைய உள்ளது. இதனை தவிர தமிழ் சினிமாவில் முதன் முதலாக வரும் தொடர்சியான படமாக இது அமையவுள்ளது. ஏனெனில் இப்படத்தை தொடர்ந்து இப்படத்தின் பல பாகங்கள் வெளிவர உள்ளன என கெளதம் கூறியுள்ளார்.

1 comments:

Post a Comment