Sunday, December 25, 2011

நண்பன் இசை விமர்சனம்


விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் நண்பன். இயக்கம் சங்கர். இசை ஹரிஸ்ஜெயராஜ். தயாரிப்பு ஜெமினி பிலிம்ஸ் .
இப்பதில் மொத்தம் ஆறு பாடல்கள்.
முதலாவது பாடல் அஸ்கு லஸ்கா
பாடியவர்கள் :- விஜய் பிரகாஷ் சின்மயி சுவி ஆகியோர் பாடியுள்ளனர். வித்தியாசமான சொற்களை கையாண்டுள்ளார் மதன் கார்கி. பல மொழி வசனங்களை உள்ளடிக்கி தொடங்கும் இப்பாடல் விஜய் இலியானா காதலை மையப்படுத்தி அமைக்கப்படுள்ளது. வித்தியாசமான சொற்களுடன் இனிமையான மெலடி இசைக்கு ஏற்ற வரிகளை கொண்டுள்ளது. இப்பாடலில் ஹரிசின் இசையும் மிக அருமையாக அமைந்துள்ளது. மொத்தத்தில் இப்பாடல் காதலர்களுக்கு பெரிய பிளஸ் . ஏனையவர்களின் காதுக்கும் மனதுக்கும் இனிமைதரும் பாடலாக அமைந்துள்ளது இப்பாடலை லண்டனில் படமாக்கியுள்ளார் சங்கர்.

 இரண்டாவது பாடல் :- என் பிரண்டை போல யாரு மச்சான்
இப்பாடல ஏற்கனவே பட முன்னோட்டதுடன் வெளியாகி ஹிட் அடைந்தது. இப்பாடலை கேட்க அனைவரும் காத்திருந்தனர் . அவர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. இப்பாடலின் இடையிடையே வித்தியாசமான இசை கருவிகளை பயன்படுத்தியுள்ளார் ஹரிஸ். கிரிஸ் மற்றும் சுசித் சுரேசன் இப்பாடலை பாடியுள்ளனர். நண்பனை பற்றிய பாடலாகவும் நண்பனை தேடும் பாடலாகவும் அமைந்துள்ளது.இப்பாடலை  ஜீவா மற்றும் சிறிகாந்த் விஜயை தேடும் விதமாக படமாக்கியுள்ளார் சங்கர். பாடலை எழுதியவர் விவேகா.
முன்றாவது பாடல் :- எந்தன் கண் முன்னே
ஆலப் ராஜு இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலுக்குரிய வரிகளை எழுதியவர் மதன் கார்கி. கோ படத்தில் என்னமோ எதோ படலை பாடியவர் ராஜு அதன் பின் ஹரிசின் இசையில் இப்பாடலை பாடியுள்ளார். ஹரிசின் ஹிட்டர் இசை மிகவும் அருமையாக வந்துள்ளது. நல்ல இசை மிகவும் அருமையான உணர்வை ஏற்படுத்துகிறது.
நான்காவது பாடல் :- ஆல் இஸ் வெல்
ஹேமசந்திரன் மற்றும் முகேஷ் பாடியுள்ளனர். ந.முத்துக்குமார் இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். த்ரி இடியட்ஸ் ஹிந்தி படத்தில் வெற்றி பெற்ற ஆல் இஸ் வெல் வரிகளை பயன்படுத்தியுள்ளார் முத்துக்குமார். இப்பாடலில் இளம் சந்ததியின் துடிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் அமைத்துள்ளார் ஹரிஸ்.
ஐந்தாவது பாடல் :- இருக்கான
பா.விஜய் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார். விஜய் பிரகாஸ் ஜாவேத் அலி சுனிதி ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். இப்படத்தின் குத்துப்பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலுக்கு அழகான செட் போட்டு படமாக்கியுள்ளார் சங்கர். இப்பாடல் ஹரிசின் மைகள் என்று சொல்லும் அளவுக்கு அருமையாக வந்துள்ளது.
ஆறாவது பாடல் :- நல்ல நண்பன்
நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு ராமகிரிச்ணன் மூர்த்தி இப்பாடலை பாடியுள்ளார். நண்பர்களுக்கு பிடிக்கும் வகையில் நட்பின் பெருமையை கூறும் பாடல்களாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ஆறு பாடல்களையும் வித்தியாசமாக அமைத்து மிகவும் இனிமையான இசையை வழங்கியுள்ளார் ஹரிஸ். நண்பன் பாடல்கள் அனைவரது இதயத்தையும் கவரும் பாடல்களாக வந்துள்ளது.
நண்பன் இசைக்கு எனது புள்ளி 4.5/5

அன்புடன்
கிஷோர்

உங்கள் கருத்துக்களையும்  எதிர்பார்க்கிறோம் .


1 comments:

all song is all is welllllllllllllllll

Post a Comment