பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Thursday, March 31, 2011

பகலவன் எப்போது சிறப்புப்பார்வை

விஜயும் சீமானும் விஜயின் 50 வது படத்தில் இணைந்திருக்க வேண்டும் ஆனால் பல்வேறு காரணங்களால் சீமான் ஜெயிலுக்கு போக விஜயும் சீமானும் இணைய முடியாமல் போனது .51 வது 52 வது படங்களை கடந்து விஜயின் 53 வது படத்தை சீமான் இயக்குவதாக இருந்தது.ஆனால் விஜய் நண்பன் படத்தில் சங்கரின் இயக்கத்தில் நடிக்க சென்று விட்டார்.இதனால் 54 வது படத்தில் விஜயும் சீமானும் இணைவதாக இருந்தது.தற்பொழுது தேர்தல் பணி நடப்பதால் அதனை முடித்துக் கொண்டு விஜயும் சீமானும் இணைவதாக இருந்தது.ஆனால் அதிலும் இப்பொழுது குழப்பம் நிலவுகிறது.ஏனெனில் விஜய் மணிரத்தினத்தின் படத்தில் நடிக்க இருக்கிறார் இப்படப்படப்பிடிப்பு தொடங்கினால் இன்னும் பகலவன் பிந்தும் என எதிர்பார்கப்படுகிறது.ஆயினும் இப்படத்தை மிக விரைவில் தொடங்கி முடித்து விடும் முனைப்பில் இருக்கிறார் சீமான் என சீமான் தரப்பு கூறுகிறது பொன்னியின் செல்வன் இவ்வருட இறுதியில் தொடங்கவிருப்பதால் மே ஜூன் மாதங்களில் பகலவன் படத்தை தொடங்கி முடிப்பதென சீமான் உள்ளார்.விஜயின் வேலாயுதமும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது நண்பன் படமும் வேகமாக வளர்கிறது.இதனால் விஜய் ஜூன் மாதத்தில் பகலவன் படத்தில் நடிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலாயுதம் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது

அடுத்து விஜய் நடிப்பில் வெளிவர உள்ள மிகப்பிரமாண்டமான படம் வேலாயுதம் ஆகும்.இதனை ஜெயம் ராஜா இயக்குகிறார்.இப்படத்தின் 80 வீதமான வேலைகள் முடிவடைந்துவிட்டன.விஜய் ஜெனிலியா கன்சிகா சரண்யாமோகன் சந்தானம் நடிக்கும் இப்படம் மிகவும் சிறப்பான படமாக அமையவுள்ளது.இப்படம் குடும்ப சென்டிமென்ட் ஆக்சன் காமெடி குத்துப்பாட்டு என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டபடமாக அமைந்து ரசிகர்களை கொள்ளையடிக்க வர உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இன்னும் 2 பாடல்காட்சிகள் படமாக்கப்[ட உள்ளன.படத்தின் போஸ்புரடெக்சன் வேலைகளும் தொடங்கியுள்ளன.இவ்வருடம் வெளியாகி வெற்றியடைந்த காவலன் படத்தின் சந்தோசத்தோடு இப்படத்தை 2011 இன் மத்தியில் வெளியிட உள்ளனர்.
இதனையடுத்து விஜய் சங்கரின் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்து வருகிறார் இப்ப்டமும் 30 சதவீதம் முடிவடைந்துள்ளது.காலாஸில் சூட் பண்ண வேண்டிய அனைத்தும் சூட் பண்ணி முடிந்துள்ளது.அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் விஜய் நடிக்க கால்சீட் கொடுத்துள்ளார்.இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்சியில் உள்ளனர்.
வேலாயுதம் படபாடல்கள் இசையமைப்பவர் விஜய் அண்டனி இவர் 2009 இன் சிறந்த இசையமைப்பாளர் விருதை வேட்டைக்காரன் படத்துக்கு பெற்றார்.இதனையடுத்து விஜயும் ஆன்டனியும் இப்ப்டத்தில் இணைகின்றனர். இப்பாடல்கள் அனைவரையும் கவரும் என நம்பலாம்.சிறந்த இசையை விஜய் அன்டனி வழங்கவுள்ளார்.

விஜய் ரஜனியின் தேர்தல் நேர முடிவு என்ன?

தேர்தல் நேரத்தில் வெளிநாட்டுக்கு பறந்துவிடுவார்கள் என்று கணிக்கப்பட்ட இரு பெரும் நடிகர்கள் அந்த கணிப்பை பொய்யாக்கிவிடுவார்கள் போலிருக்கிறது.
இதில் ஒருவர் ரஜினி மற்றவர் விஜய். திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று கேட்டார்களாம் ரஜினியிடம்.
அவரோ, அதற்கு பிடி கொடுக்காமல் வேண்டுமென்றால் உங்க கூட்டணி வேட்பாளர்களை வீட்டுக்கு வரச்சொல்லுங்க.
சால்வை போட்டு அனுப்புகிறேன். அதுதான் என்னால் செய்ய முடியும் என்றாராம்.
தேர்தலுக்குள் இன்னும் முக்கியமான சிலருக்கு போர்வை போர்த்த வேண்டியிருப்பதால்தான் இந்த பயணத்தை தள்ளி போட்டிருக்கிறார் ரஜினி.
விஜய் விஷயத்தில் அவர் நேரடியாக ஏதாவது ஒரு பொதுக் கூட்டத்தில் தோன்றுகிற அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கிறது. இப்போதைக்கு அதை வெளிப்படையாக சொல்ல வேண்டாம்.
தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறாராம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.

விறு விறு வேலாயுதம்



விஜய் நடிக்கும் வேலாயுதம் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.இப்படத்தின் கிளைமைக்ஸ் சண்டைக்காட்சி கோலிவூட் டக்ரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.விஜய் வில்லனுடன் மோதும் காட்சியில் முகமூடி அணிந்து மிக அழகாக நடித்துள்ளார் விஜய்.இக்காட்சி படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது.அடுத்து வேலாயுதம் படக்குழுவினர் விஜயின் ஒப்பினிங் பாடலை படமாக்கவுள்ளனர்.இப்பொழுது ஜெயம் ராஜா விஜய் நடிக்கும் ஓப்பினிங் பாடலை படமாக்குவதில் மும்முரமாக உள்ளார்.இப்பாடல் காட்சி பொல்லாச்சியில் உள்ள திருமலை கிரியில் சூட்பண்ணப்பட உள்ளது.இப்பாடல் 1000 நடனக்கலைஞர்களுடன் விஜய் ஆட உள்ளார்.

அதிமுகவுக்கு ஆதரவுக்கு எதிர்ப்பு: சேலத்தில் விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு!!

நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதை எதிர்த்து சேலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைத்து, உறுப்பினர் கார்டுகளை தீவைத்து எரித்தனர் ரசிகர்கள்.
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தப் பின்னர், எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்தார்.
நடிகர் விஜய்யின் இந்த முடிவுக்கு, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக சேலத்தில் அவருடைய ரசிகர்கள் இடையே எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கெனவே இங்கு விஜய் ரசிகர்கள் திமுக – அதிமுக என இரு பிரிவாக நின்று சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளதால், இயக்கத்தையே கலைத்துவிட்டனர் ரசிகர்கள்.
சேலம் அழகாபுரம் பகுதியில் இருந்த, இளைய தளபதி விஜய் போக்கிரி மக்கள் இயக்கத்தை கலைத்ததோடு, உறுப்பினர் அட்டைகளையும் தீயில் போட்டுக் கொளுத்தினர் ரசிகர்கள்.
மன்ற தலைவர் ஆசைதம்பி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சசி உள்ளிட்டோர், மன்றத்தின் பிளக்ஸ் பெயர் பலகையையும் கிழித்து எறிந்தனர். ஆவேசமாக விஜய் எதிர்ப்பு கோஷங்களை முழங்கினர். அதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மன்ற ரசிகர்கள் கூறும்போது, “விஜய் ரசிகர்மன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் விஜய் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
ரசிகர்களை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது வருத்தம் அளிக்கிறது. எங்களை பொருத்தவரை நாங்கள் தி.மு.க.வின் ஆதரவாளர்கள். ஆனால் விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் நாங்கள் மன்றத்தை கலைத்துவிட்டோம்,” என்றனர்.
மதுரை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளிலும் விஜய் முடிவுக்கு, ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இப்படி ஒன்றும் நடக்கவில்லை என சந்திரசேகர் தெரிவித்தார்.

விஜய் ஆதரவு மட்டும்தான்; அதிமுகவுக்கு பிரச்சாரம் இல்லை! – எஸ்ஏ சந்திரசேகரன்

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார் விஜய். ஆனால் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யவாரா என்று தெரியவில்லை என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்தார்.
நடிகர் விஜயின் தந்தையும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளருமான ஏ.எஸ்.சந்திரசேகரன் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது தனது அதிமுக ஆதரவு குறித்து அவர் கூறுகையில், “மக்கள் இயக்கம் ஒரு அரசியல் இயக்கம் அல்ல. நானும், என் மகன் விஜயும் அரசியல்வாதிகள் அல்ல. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் சினிமா கலைஞர்களாகவே இருக்க விரும்புகிறோம்.
ஜனநாயக நாட்டில் எல்லா தரப்பு மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும். அதற்கு தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். இது தான் எங்கள் இயக்கத்தின் லட்சியம். இதற்காக அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளித்து இருக்கிறோம்.
அ.தி.மு.க.விற்கு ஆதரவளிப்பது என்ற முடிவை நானோ, விஜயோ தன்னிச்சையாக எடுத்த முடிவு இல்லை. நிர்வாகிகளை அழைத்து அவர்களின் கருத்துப்படி கேட்டுத்தான் இந்த முடிவை எடுத்தோம்.
நடிகர் விஜய் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்வாரா என்று கேட்கிறார்கள். விஜய் தலைமையிலான மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரசாரம் செய்ய இருக்கிறேன். விஜய் எப்போது, எப்படி பிரசாரம் செய்வார் என்பது பற்றி எனக்கு தெரியாது. அதை அவர்தான் சொல்ல வேண்டும். இப்போது ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் அவர். பிரச்சாரம் சாத்தியமா என்று தெரியவில்லை.
சேலம் மாவட்டத்தில் ரசிகர்கள் சிலர் விஜய்யின் அதிமுக ஆதரவு நிலையை எதிர்த்து மன்ற உறுப்பினர் கார்டுகளை எரித்ததாகக் கூறப்படுவது தவறு. வேண்டுமென்றே உறுப்பினர் இல்லாதவர்களை அழைத்து இது போன்று செய்திருக்கிறார்கள்”, என்றார்.

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு! எஸ்.ஏ.சி. மறுப்பு!!

அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததை கண்டிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சேலத்தில் கலைக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை; உறுப்பிர்கள் யாரும் உறுப்பினர் கார்டை எரிக்கவில்லை என்று நடிகர் விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக திரையுலகில் நடிகர் விஜய் ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக காவலன் பட ரீலிஸின்போது ரொம்பவே மனம் நொந்து போகும் அளவுக்கு பல பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்தன. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் காரணம் ஆளும்கட்சிதான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டும் அளவுக்கு போனது நிலைமை.
இதனால் இந்த தேர்தலில் விஜய் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி., விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனது ஆதரவை தெரிவித்தார். அதோடு அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவிருப்பதாகவும் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதவு தெரிவித்ததை கண்டிக்கும் வகையில் சேலத்தில் விஜய் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அழகாபுரம் பகுதியில் இருந்த, இளைய தளபதி விஜய் போக்கிரி மக்கள் இயக்கத்தை கலைத்ததோடு, உறுப்பினர் அட்டைகளையும் தீயில் போட்டுக் கொளுத்தினர் ரசிகர்கள். மன்ற தலைவர் ஆசைதம்பி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சசி உள்ளிட்டோர், மன்றத்தின் பிளக்ஸ் பெயர் பலகையையும் கிழித்து எறிந்தனர். ஆவேசமாக விஜய் எதிர்ப்பு கோஷங்களை முழங்கினர். அதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுபற்றி டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டதற்கு, அப்படி எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை என்று மறுத்தார். அவர் கூறுகையில், இது தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல. எல்லா மாவட்ட தலைவர்களிடமும் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவுதான். சேலத்தில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை. விஜய் ரசிகர்கள் எங்கள் முடிவை எதிர்க்கவில்லை; ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், என்றார்.

விஜய்யும், அவரது ரசிகர்களும் அதிமுகவிற்கு முழு ஆதரவு

நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கத்தை கலைத்து உறுப்பினர் கார்டுகளை தீவைத்து எரித்தனர்.
இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் உடன் இருந்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் செய்தியாளர்களிடம், விஜய் அதிமுகவிற்கு ஆதரவு அளித்துள்ளார். அவரது ரசிகர்களும் ஆதரவு அளிப்பார்கள். விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. இதை விஜய்தான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க தேவையில்லை. அவரது வளர்ச்சியில் அக்கறை கொண்ட அவரது தந்தை நான் சொல்கிறேன். விஜய்யும் அவரது மக்கள் இயக்கமும் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறது.
சில விசமிகள் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்ததால் அவரது ரசிகர்கள் மக்கள் இயக்கத்தில் இருந்து வெளியேறிவிட்டனர் என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர். வேண்டுமானால் சேலம் மாவட்ட தலைவரையே கேடுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கை காட்டினார். அவர், உறுப்பினர் கார்டுகளை எரித்தவர்கள் விபரம் அறியாத சிறியவர்கள்.
அவர்கள் சிலரது பேச்சைக்கேட்டு அப்படி செய்துவிட்டார்கள். அதை சில ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன. நாங்கள் எங்கள் தலைவர் விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். அவர் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுகவை ஆட்சியில் அமர்த்த நாங்கள் முழு மூச்சுடன் பாடுபடுவோம் என்று தெரிவித்தார்.

பாலிவுட்டில் இலியானா

தமிழில் "கேடி" படத்துக்குப் பின் விஜய்க்கு ஜோடியாக "நண்பன்" படத்தில் நடிக்கிறார் இலியானா.
இந்தப் படத்தை ஷங்கர் இயக்குகிறார். கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி முன்னணி இடத்தை பிடித்த இலியானா இப்போது கோலிவுட், பாலிவுட்டிலும் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறார். கோலிவுட்டில் வந்த நண்பன் வாய்ப்பை அடுத்து பாலிவுட்டிலும் கால் பதிக்கிறார்.
அனுராக்பாசு இயக்கத்தில் பர்பி படத்தில் நடிக்கிறார். பாலிவுட்டில் கடந்த ஆண்டே பல வாய்ப்புகள் வந்த போதிலும், பெரிய பேனர் மற்றும் பெரிய இயக்குநருக்காகக் காத்திருந்தார். அனுராக்பாசு படத்தில் வாய்ப்பு கிடைத்தவும் ஓ.கே சொல்லி விட்டாராம்.
ரன்பீர் கபூர் ஹீரோ, பிரியங்கா சோப்ரா ஹீரோயின், இரண்டாவது ஹீரோயின் என்ற அந்தஸ்து இருந்தாலும் கேரக்டர் பிடித்திருந்ததால் ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.
"கதை முழுவதும் ரன்பீர் கபூரை சுற்றியே நடப்பதால் முதல் ஹீரோயின், இரண்டாவது ஹீரோயின் என்பது இலியானாவுக்கு பிரச்னை இல்லை" என அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்களை திருப்திபடுத்தவே நடிக்கிறேன்: மியூசிக் டைரக்டர் விஜய் ஆண்டனி

ரசிகர்களை திருப்திபடுத்தவே நடிக்கிறேன்: மியூசிக் டைரக்டர் விஜய் ஆண்டனி

விஜய் நடிக்கும் 'வேலாயுதம்' படத்திற்கும், யுவன் யுவதி, விஷால் நடிக்கும்  பிரபுதேவா இயக்கும் படத்திற்கும் இசையமைக்கும் விஜய் ஆண்டனி, தமிழில் ஹீரோவாக நடிக்கிறார்.
இதெற்கென தனியே நேரம் ஒதுக்கி நடிப்பையும், இசையமைப்பதையும் கவனிக்கிறாராம். 'கோலிவுட்டில் நான்' படத்தில் நாயகனாக நடிக்கிறேன்.
இந்த படத்தை ஜீவா சங்கர் இயக்குகிறார். இதில் ரூபா மஞ்சரி, அனுயா நடிக்கிறார்கள். ஒருவன் எப்படி பெரியவனாகிறான் என்பதுதான் இந்த படம்.
பரபரவென வேகமாக ஓடுகிற 'ரேஸி' ஸ்கிரிப்ட்டில் நடித்துள்ளேன். படங்களுக்கு இசையமைத்த நான், ஹீரோவாக நடிக்க வந்தது பற்றி என்னிடம் கேட்கிறார்கள்.
சவுண்ட் இஞ்சினியராக இருந்து, இசையமைக்க வந்தேன். ஹிட் பாடல்களை தந்து, இப்போது நான் படத்தில் நடிக்கிறேன்.
இதற்காக நேரம் ஒதுக்கி இசையமைப்பு, நடிப்பு இரண்டையும் சரியாக கவனித்து, என் ரசிகர்களை திருப்தி படுத்த இறங்கியுள்ளேன்.
டைரக்டர் பிரபு தேவா இயக்கும் படம், வேலாயுதம், யுவன்யுவதி ஆகிய படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறேன்'என்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

Saturday, March 26, 2011

நண்பன் பட பாடல் லொகேசன் ஸ்டில்கள்





மொதல்ல விஜய்.. அடுத்து அஜீத்..!

அஜீத் நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் ஜெயம் ராஜா

விஜய் நடிக்க,  வேலாயுதம் படத்தை இயக்கி வருகிறார் ராஜா. சில தினங்களுக்கு முன் வேலாயுதம் படப்பிடிப்பு நடத்த தளத்திற்கு அருகே மங்காத்தா படப்பிடிப்பு நடந்ததால் அஜீத்தும் விஜய்யும் சந்தித்து கொண்டனர்.

அஜீத்திற்கு ஒரு வாட்ச் ஒன்றை பரிசளித்து 'நாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல; நெருங்கிய நண்பர்கள் தான்' என்பதை உறுதிப்படுத்தினார் விஜய். அதனை அடுத்து இருவரும் சந்தித்து அடிக்கடி தளத்தில் சந்தித்து கொண்டது ஒரு புறம் இருந்தாலும், வேலாயுதம் இயக்குனர் ராஜாவும் அஜீத்தை சந்தித்து பேசியிருக்கிறார்.

வெங்கட்பிரபு அஜீத், விஜய் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையை வெளிபடுத்த, ராஜாவோ விஜய் படத்தை அடுத்து உங்களின் படத்தை இயக்க வேண்டும் என்று அஜீத்திடம் ஆசை வெளிப்படுத்தி  இருக்கிறார்.
ராஜாவின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார் அஜீத். ஆகையால் மங்காத்தா படத்தை அடுத்து பில்லா 2 படத்தில் நடிக்கவிருக்கும் அஜீத், அதனை அடுத்து ராஜாவின் இயக்கத்தில் நடிக்கலாம் என்று ராஜாவின் நெருங்கிய வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.

விக்ரமுக்கு 'நோ' விஜய்க்கு 'எஸ்'



விஜய் நடித்து வரும் நண்பன் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் ராணா படத்தில் இலியானா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்தி கொண்டு இருக்கிறார். இந்நிலையில் மதராசபட்டினம் விஜய் இயக்கத்தில் 'தெய்வ திருமகன்' படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக கூட நடிக்க வந்த வாய்ப்பை புறக்கணித்தார் இலியானா..

இந்நிலையில் 'நண்பன்' பட வாய்ப்பு கதவைத் தட்டியது. 3 இடியட்ஸ் ரீமேக், ஷங்கரின் இயக்கம், விஜய்க்கு ஜோடி என்றவுடன் நண்பன் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து நட்புக்கரம் நீட்டினார்.

ரஜினி நடிக்கப் போகும் திரைப்படம் ராணா. இதில் ரஜினி மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதால் மூன்று நாயகிகளை தேடி வந்தனர். முதலாவதாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மற்ற இரு நாயகிகளுக்காக பேச்சுவார்த்தையில் வித்யா பாலன், ரேகா, ஹேமா மாலினி, அசின், அனுஷ்கா என ஏகப்பட்ட பெயர்கள் பட்டியலில் வந்து கொண்டே இருக்க, இப்போது இலியானா பெயரும் அதனுடன் இணைந்திருக்கிறது.

இதில் ரேகா நடிக்க இயலாது என கூறி விட்டதால், அந்த வேடத்தில் ஹேமமாலினி நடிக்கலாம் என்கிறது படக்குழு.

ஏப்ரல் 18 முதல் படப்பிடிப்புக்கு போக வேண்டும் என்று ரஜினி சொல்லியிருப்பதால், போட்டி பலமாக இருக்கிறது.

காவலன் ஸ்டில்கள்




விஜயின் புலிவேட்டை ஆந்திராவில் எப்படி?

விஜய் நடித்து வெளிவந்த புலிவேட்டை திரைப்படத்தின் 1 நாள் வசூல் 49299 ஆகும்.ஆந்திராவில் வெளியாகிய இப்படம் வசூலில் இந்னிலையை அடைந்தது விஜய் ரசிகர்கள் ஆந்திராவில் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது.விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் திரைப்படமே இவ்வாறு மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.ஆந்திராவின் தரவரிசையில் 2 இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Friday, March 25, 2011

புது அனுபவம் சங்கர் பேட்டி


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கும் “நண்பன்” படத்தின் சூட்டிங்கை விறுவிறுப்பாக எடுத்து கொண்டு இருக்கும் டைரக்டர் ஷங்கர், 2ம் கட்ட சூட்டிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டார்.
இந்தியில் வெளிவந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டான “3-இடியட்ஸ்” படம் தமிழில் “நண்பன்” என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல்கட்ட சூட்டிங் கடந்தமாதம் ஊட்டியில் தொடங்கியது. ஊட்டியில் சூட்டங்கை முடித்‌த கையொடு, 2ம் கட்ட சூட்டிங்கிற்காக டேராடூன் புறப்பட்டு சென்றது நண்பன் டீம். அங்கு விறுவிறுப்பாக நடந்த இப்படத்தின் சூட்டிங் காட்சிகள் நிறைவு பெற்றுவிட்டன.
இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் கூறியதாவது, நண்பன் படத்தின் 2ம் கட்ட சூட்டிங் டேராடூனில் வெற்றிகரமாக முடிந்து விட்டது. 2ம் கட்ட சூட்டிங் முழுவதும் கல்லூரியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. முதன்முறையாக விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோரை வைத்து இயக்கியது ஒரு புது அனுபவத்தை தந்தது என்றார்.

நண்பன் ஸ்டில்கள்


கலக்க தொடங்கிய சட்டப்படி குற்றம்

ஆர்வத்தோடு விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதைவிட பேரார்வத்தோடு இப்படத்தை தடுத்து நிறுத்துகிற வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம் சிலர்.

இப்படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ செல்வபெருந்தகை தேர்தல் ஆணையத்துக்கு மனு கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த மனுவை ஆணையம் பரிசீலித்ததாக கூட தெரியவில்லை.
இன்னொரு செய்தி. இப்படத்திற்கு நீதிமன்றத்தில் தடை கோரும் முயற்சியும் நடப்பதாக கூறுகிறார்கள் எஸ்.ஏ.சி வட்டாரத்தில். கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பித்தாராம் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தை பார்த்தவர்கள் நல்ல விலைக்கு வாங்குவதாகவும் தெரிவித்தார்களாம். ஆனால் கடைசி நேரத்தில் அவர்களை யார் மிரட்டினார்களோ தெரியாது. அத்தனை பேரும் கையை விரித்துவிட்டார்களாம். "அதற்கெல்லாம் அஞ்சுகிற ஆள் நான் இல்லை. கிட்டதட்ட 160 தியேட்டர்களில் நானே படத்தை வெளியிடுகிறேன்" என்றார் எஸ்.ஏ.சி நம்மிடம்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நம்புகிறவன் நான். இந்த படத்தை அவர்கள் பார்த்துவிட்டு சொல்லட்டும். இதுவரை நாட்டில் நடக்கும் அநீதிகளை மட்டுமே எடுத்துச் சொன்னது சினிமா. நான் இந்த படத்தில் அந்த அநீதிக்கான தீர்வையும் சொல்லியிருக்கிறேன் என்றார் அவர்.

ஆந்திரப்பிரதேசத்தை கலக்கும் புலிவேட்டை

விஜய் நடிப்பில் வெளிவந்து தமிழில் வெற்றி நடைபோட்ட வேட்டைக்காரன் படம் புலிவேட்டை என்ற பெயரில் டப்பிங் செய்து தெலுங்கில் இன்று வெளியிடப்பட்டது.இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அங்கு இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.  

காவலன் 11 வது வெற்றி வாரம்

Thursday, March 24, 2011

காவலன் 70 வது நாள்

விஜய் பிரச்சாரம் செய்யமாட்டார்: யாருக்கு வாக்களிப்பதென ரசிகர்களுக்குத் தெரியும்! -- எஸ்ஏ சந்திரசேகரன்


வரும் தேர்தலில் விஜய் யாருக்கும் ஆதரவாக நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டார். ஆனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களுக்குத் தெரியும் என்று அவரது தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகரன் அறிவித்துள்ளார். காவலன் படத்துக்கு எழுந்த பிரச்சினைதான் விஜய்யை ஆளும்கட்சிக்கு எதிராக திருப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்போது அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கியுள்ள சட்டப்படி குற்றம் படத்துக்கும் பிரச்சினை எழுந்துள்ளது.

படத்தை யாரும் வாங்கக் கூடாது என ஆளும் கட்சித் தரப்பில் தடுப்பதாகக் கூறப்படுகிறது. எனவே படத்தை சொந்தமாக வெளியிட முடிவு செய்துள்ளார் சந்திரசேகரன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "என் படத்தை எதற்காக தடுக்கப் பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. தான் சார்ந்த சமுதாயத்தின் மீது கோபம் கொண்ட இளைஞர்கள் ஒன்று கூடி போராட ஆரம்பிக்கும் போது வெடிக்கும் புரட்சிதான் இந்தப் படம். இது யாருக்கும் எதிரான படம் என்பதை விட, சமூகத்துக்கு தேவையான படம் என்பதே பொருத்தமாக இருக்கும்.

படத்தைப் பார்த்த எல்லோருக்கும், குறிப்பாக விநியோகஸ்தர்களுக்கும் திருப்தி. ஆனால் வாங்கத்தான் யாரும் வரவில்லை. இந்தப் படத்தை வாங்கினால், தனிப்பட்ட முறையில் விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்டதாகத் தெரிந்து கொண்டேன். அதனால் இப்போது நானே ரிலீஸ் செய்கிறேன். இதே வடபழனியில் பிளாட்பாரத்தில் முன்னொரு காலத்தில் படுத்து கிடந்தவன் நான். அதனால் பணத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை.

தேர்தலுக்காக எடுக்கப்பட்ட படமா?

இந்தப் படத்தை தேர்தலுக்காக எடுக்கவில்லை. தேர்தல் ஏப்ரல் மாதத்தில் வரும் என்று போன மாதம் வரை யாருக்குமே தெரியாது. தேர்தல் அறிவிக்கும் முன்பே நான் ரிலீஸ் தேதி வைத்துவிட்டேன். தயாரிப்பாளர் விரும்பும் நேரத்தில்தான் ஒரு படம் திரைக்கு வர வேண்டும். நீதிக்கு தண்டனை எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் ரிலீஸ் ஆனது. `நான் சிகப்பு மனித`னும் அப்படிதான். நீதிக்கு தண்டனை எடுத்தபோது நான் தி.மு.க. உறுப்பினர் இல்லை. சட்டப்படி குற்றம் எடுக்கும்போது நான் அதிமுக உறுப்பினர் அல்ல.

விஜய் ஆதரவு யாருக்கு?

விஜய் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் தெரியும். பொது மக்களுக்கே விஜயின் மனநிலை புரிந்து இருக்கிறது. அவர் ஒரு அமைதியான போராளி. அவருக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். எல்லா விஷயங்களையும் புரிந்து வைத்திருக்கிறார். அனைத்து விதத்திலும் செல்வாக்கில் இருக்கும் நமக்கே இவ்வளவு பிரச்னையா? என்பதுதான் அவர் ஆதங்கமும் கோபமும்.

இப்போதைக்கு அரசியல் இல்லை என்று சொல்லியும் நம்மை ஏன் குத்துகிறார்கள்? என சிந்திக்கிறார். அவர் பலவீனமானவர் அல்ல, பலமானவர் என்பது இதில் இருந்தே புரிகிறது. கண்டிப்பாக விஜய் யாருக்கு ஆதரவாகவும் தேர்தல் பிரசாரம் செய்யமாட்டார். ஆனால் விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர்களுக்கே தெரியும்," என்று கூறியுள்ளார்.

சட்டப்படி குற்றம் – இன்னொரு காவலன்?

காவலன் படத்துக்கு எதிர்கொண்ட அனைத்துப் பிரச்சனைகளையும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இன்னொருமுறை சந்திக்க வேண்டிய நிலைமை. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ‌ப்பெருந்தகை.
சட்டப்படி குற்றத்தில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக சில கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் ஆத‌ரித்தும், சிலரை விமர்சித்தும் காட்சி வைத்திருக்கிறார்கள் என இவர்தான் தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்தார்.
இதை சாக்காக வைத்து படத்தை வாங்க தயக்கம் காட்டுகிறார்கள் விநியோகஸ்தர்கள். பணம் கொடுத்த பிறகு கடைசி நிமிடத்தில் படம் வெளிவராமல் போனால்…? மேலும், இதையே காரணம் காட்டி படத்தின் பேரமும் பேசலாம்.
இதை எதிர்பார்க்காத எஸ்.ஏ.சி. 25ஆம் தேதி படத்தை வெளியிட வேண்டும் என்ற முடிவுடன் திரையரங்கு உ‌ரிமையாளர்களை நேரடியாக சந்தித்து பேசுவது என முடிவெடுத்துள்ளாராம்.

எஸ்.ஏ.சி.,க்கு ஷங்கர் புகழாரம்

தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர்களில் டைரக்டர் ஷங்கரும் ஒருவர். தமிழ் சினிமாவை ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்த்தியவர். ஷங்கர் ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. விஜய்யின் அப்பாவும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்தபோது அவரிடம் கற்ற விஷயங்கள் விலைமதிக்க முடியாதவை என்று எஸ்.ஏ.சி.,க்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து ஷங்கர் கூறியதாவது, என்னுடைய 23வது வயதில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அப்போதெல்லாம் பொறுப்பில்லாமல் செயல்பட்டேன். ஒருநாள் ஏஸ்.ஏ.சி., என்னை கூப்பிட்டு சத்தம் போட்டார். கஷ்டப்பட்டு உழைக்கவில்லையென்றால் வாழ்க்கையில் எதையுமே உன்னால் சாதிக்க முடியாது என்று அறிவுறுத்தினார். அவருடைய இந்த வார்த்தை என்னை முற்றிலுமாக மாற்றியது. அன்றுமுதல் கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன், இன்று வாழ்க்கையில் நல்ல நிலையை எட்டியிருக்கிறேன். நான் இந்தநிலைக்கு வருவதற்கு அவர்தான் காரணம்.
அதேபோல் விஜய்யும், அவரது அப்பாவை போல பிறருக்கு மரியாதை கொடுப்பது, சூட்டிங்கில் ஒரு ஈடுபாடோடு நடிப்பது கடுமையாக உழைப்பது என்று அசத்துகிறார். விஜய்யுடன் இ‌ணைந்து படம் பண்ணும்போது அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் என்று புகழ்ந்து கூறுகிறார். தற்போது விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து நண்பன் என்ற படத்தை எடுத்து வருகிறார் ஷங்கர். இப்படம் இந்தியில் வெளிவந்த 3-இடியட்ஸ் படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தப்பு செய்தேன்… பாடம் கத்துக்கிட்டேன்!’- இலியானா ‘ஓபன்’ பேட்டி

சினிமாவில் ஆரம்பத்தில் எனக்கு சரியான வழிகாட்டி யாருமில்லை. அதனால் சில தவறுகள் செய்தேன். பாடங்கள் கற்றுக் கொண்டேன், என வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளார் நடிகை இலியானா.
தெலுங்கில் கொடிகெட்டிப் பறப்பவர் நடிகை இலியானா. கோடிகளை கொட்டிக் கொடுத்து அவரை தங்களது படத்தில் நடிக்க வைக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆந்திராவில் அம்மணிக்கு அவ்வளவு பிஸி. அவர் தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார். தற்போது ஷங்கரின் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
தனது நடிப்பு அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “சினிமாத்துறைக்கு நான் வந்தபோது இங்கு எனக்கு யாரையும் தெரியாது. அதனால் வழிகாட்ட ஆளின்றி திணறினேன், சில தவறுகளையும் செய்தேன். அந்த தவறுகளில் இருந்து நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டேன்.
இப்போது பக்குவம் வந்துவி்ட்டது. என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதை கேட்டு அதில் என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறேன்.
பணம் சம்பாதிப்பது மட்டும் எனது குறிக்கோள் இல்லை. வருடத்திற்கு ஒரு படம் நடித்தால் கூட போதும். ஆனால் என் கதாபாத்திரம் பேசப்பட வேண்டும். வங்கிக் கணக்கை பார்த்தால் நல்ல நடிகை என்று பெயர் எடுக்க முடியாது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் வெளியாக வேண்டும் என்று நினைத்தால் நல்ல படங்களே அமையாது”, என்றார்.

Sunday, March 20, 2011

வேலாயுதம் நிலை என்ன?

விஜய் நடிப்பில் அஸ்கார் பிலிம் ரவிசந்திரனின் மிகப்பிரமாண்டமான வெளியீட்டில் வெளிவர இருக்கும் படம் வேலாயுதம்.இப்படம் காவலன் படம் சூட்டிங் நடைபெற்ற சமயத்தில் தொடங்கப்பட்டது.காவலன் முடிந்த பின் முழு வீச்சில் இப்பட சூட்டிங் இடம்பெற்றது.இப்பொழுது படத்தின் 85 % சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது.படத்தின் போஸ் புரசெக்ஸன் வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது.இன்னும் 2 பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.மற்றும் கிளைமைக்ஸ் காட்சி சூட்டிங் விரைவில் நடைபெறவுள்ளது.2 வது நண்பன்  செடூலை முடித்துவிட்டு வந்த விஜய் இதில் பங்கு பற்ற உள்ளார்.இது மிகப்பிரமாண்ட முறையில் இடம்பெற உள்ளது.இச் சண்டைகாட்சி கோலிவூட் தரத்தில் எடுக்கப்பட உள்ளது.இது முடிந்தவுடன் வெளிநாட்டுக்கு பாடல் காட்சி படமாக்க செல்லவுள்ளனர்.இப் பட பாடல் வெளியீடு மேமாத இறுதியில் இடம்பெற உள்ளது.படம் விஜயின் பிறந்த நாளுக்கு திரையில் கலக்க உள்ளது.

Saturday, March 19, 2011

மதன் காக்கி எழுதும் நண்பன் காதல் பாட்டு

மதன் காக்கி விஜய் நடிக்கும் நண்பன் படத்துக்கு பாடல்களை எழுதுகிறார்.இந்த முறை மதன் நண்பன் படத்துக்கு எழுதும் பாடல் கிந்தியில் கிட்டான Zoobie Doobie என்ற பாடலுக்காகும்.மதன் மிக அருமையாக வரிகளை எழுதுகிறார்.இது சிறந்த காதல் வரிகளை கொண்ட பாடலாக உள்ளது.இப்பாடலின் வரிகள் அருமையாக அமையும் என கூறப்படுகிறது.

அரசியலுக்கு வந்தால் கஷ்டம்: நடிகர் விஜய்க்கு குஷ்பு எச்சரிக்கை

அரசியலுக்கு வந்தால் கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அரசியல் ஆசையில் இருக்கும் நடிகர் விஜய்க்கு, நடிகை குஷ்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்றும், அதிமுகவுக்கு ஆதரவாக அறிக்கை மட்டுமே விடுப்பார் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ, இந்த தேர்தலுக்கு பிறகு விஜய் தனிக்கட்சி தொடங்கி, முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று கூறி வருகிறார்.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகை குஷ்பு அளித்த பேட்டியில், மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். விஜய்யும் தாராளமாக வரலாம்.
ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவை விட அரசியல் உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான், என்று கூறியுள்ளார்.

விஜயின் பகலவன் எப்போது?

விஜய் நடிப்பில் சீமான் இயக்கும் படம் பகலவன்.இப்படம் எப்போது தொடங்கும் என அறிவுப்பு எதுவும் வெளிவராத நிலையில் பகலவன் எப்போது வெளிவரும் என சீமானிடம் கேட்டபோது விஜயும் நானும் இணந்து பணியாற்றப்போகும் படம் பகலவன் இதற்கு விஜய் ஓ கே சொல்லிவிட்டார் எப்போதோ தொடங்க வேண்டிய படம் நான் ஜெயிலுக்கு போனதால் படப்பிடிப்பு தொடங்கவில்லை அதன் பின் விஜய் ஏனைய படங்களில் நடிக்க் தொடங்கி விட்டார் இப்பொழுது தேர்தல் பணியில் நான் இருப்பதனால் தேர்தல் முடிய படத்தை  தொடங்கவுள்ளோம் என சீமான் கூறினார்.

நண்பன் திரைப்பட முன்னோட்டம்

நடிகர்கள் - விஜய் ஜீவா சிறிகாந் இலியானா சத்தியராஜ் அனுஜா எஸ்.ஜே.சூர்யா ராகவா லாரன்ஸ் மற்றும் பலர்
இயக்கம் - சங்கர்
இசை - ஹரிஸ் ஜெயராஜ்

விஜய் சிறீகாந் ஜீவா ஆகியோர் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர்.இதில் மூவரும் சுட்டி சுட்டி குறும்புகளை செய்கின்றனர்.இது பேராசிரியர் சத்தியராஜ்க்கு பிடிப்பதில்லை.இதனால் சத்தியராஜ் இவர்கள் மூவரிலும் கோபமாக இருக்கிறார்.இவர்களின் கலாட்டா கல்லூரியில் தொடர்கிறது.இதில் பரீட்சை வர பரீட்சையில் அதிக மதிப்பெண்ணை விஜய் பெருகிறார் இதனால் விஜய் மீது சத்தியராஜ்க்கு விருப்பம் வருகிறது மீண்டும் விஜய் மற்றும் நண்பர்களின் குறும்பு தொடரவே  கோபப்படும் சத்தியராஜ் விஜய் சிறீகாந்தை விட்டு பிரியும் படி ஜீவாவுக்கு கூறுகிறார் தனது நண்பர்கள் தனக்கு செய்த உதவியும் தம் குடும்பத்துக்கு செய்த உதவியையும் எண்ணிய ஜீவா மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்யும் போது தற்கொலையிலிருந்து தப்பி கோமா நிலைக்கு போகிறார் இவர் எவ்வாறு கோமா நிலையிலிருந்து மீண்டார் பின் அவரின் வாழ்கை எண்ண ஆனது எனக்கதை நகர்கிறது . விஜய் பேராசிரியரின் நிச்சயதார்தமான இலியானவை காண்கிறார் .இலியானாவின் நிச்சயதார்த மாப்பிளை பணப்பேய் பிடித்தவராக இருக்க அதை விஜய் இலியானாவுக்கு விளக்குகிறார் அதன் பின் இருவருக்கும் காதல் வருகிறது.கல்லூரி வாழ்கைக்கு பின் விஜய் காணாமல் போகிறார் விஜயை தேடிச்செல்லும் நண்பர்கள் விஜயின் காணாமல் தேடுகின்றனர் இதற்கிடையில் இலியானாவுக்கு கல்யாண ஏற்பாடு நடைபெறுகிறது அதன் பின் விஜய் கிடைத்தாரா விஜய் இலியானா சேர்ந்தார்களா விஜய்க்கு என்ன நடந்தது ஜீவா சிறிகாந்தின் நிலை என்ன என படம் சுவாரஸ்யம் குறையாமல் நகர்கிறது.இப்படம் பொங்கலுக்கு  ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.

புலிவேட்டை பாடல்கள்


Music By Vijay Antony

Puliveta - Vijay Antony

Puliveta - Vijay Antony

Puliveta Tamil Movie, Puliveta Songs Free Download Music By Vijay Antony - Puliveta

Featuring : Vijay, Anushka, Srihari

Production : M. V. Gopala Rao
Starring : Vijay, Anushka, Srihari
Director : Babu Sivan
Lyrics : -

Yeda_Alapai - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Rakhi, Veena

Puli_Vetidi - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Ramu

Thikkedo-VmusiQ.Com.mp3

DownloadAdd to Playlist
Singer(s) : RS John Vianni, Aishwarya

Kari_Mabbu - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Saketh Naidu, Kavitha

Adugesthey - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Tippu

1

Puliveta AUDIO RELEASED in the Year of 2011


Free Listen & Download High Quality ORIGINAL CD-Rip 320kbps Puliveta Songs Music By Vijay Antony


Puliveta